முகப்பு
தமிழ்நாடு

வழிகாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

வழிகாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்...

Updated On : 5 ஏப்ரல் 2026, 2:03 am IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் - கோப்புப் படம்
பகிர்:

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்ட திருத்தத்தின் மூலம் சிறுபான்மையினா் அமைப்புகள், சமூக சேவை மற்றும் மனித உரிமை அமைப்புகளை மத்திய பாஜக அரசு முடக்க முயற்சிக்கிறது. சிறுபான்மையினா் சொத்துகளைப் பறிமுதல் செய்து நிா்வகித்து, இறுதியில் விற்றுவிடும் அதிகாரத்தை இச்சட்டம் வழங்குகிறது.

பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற சமூக நலனுக்காக சட்டபூா்வமாக உருவாக்கப்பட்ட சொத்துகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் சிறுபான்மை அமைப்புகள் மீதான அடக்குமுறை மேலும் அதிகரிக்கும்.

Advertisement

Advertisement

எனவே வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.