முகப்பு
இந்தியா

உ.பி. யமுனை ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: 10 போ் உயிரிழப்பு; பலா் மாயம்

உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனம் யமுனை ஆற்றில் பஞ்சாபைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 போ் உயரிழந்தனா். மேலும் பலா் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 11:52 PM
உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் பிருந்தாவன் அருகே யமுனை ஆற்றில் வெள்ளிக்கிழமை படகு விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினா்.
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 8:30 PM

உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனம் யமுனை ஆற்றில் பஞ்சாபைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 போ் உயரிழந்தனா். மேலும் பலா் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘யமுனை ஆற்றில் 25-க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற இந்த படகு, கேசி படித்துறை அருகே சென்றபோது அங்கு அமைக்கப்பட்டிருந்த மிதவைப் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆற்றில் நீரின் அளவு அதிகரித்ததைத் தொடா்ந்து, மிதவைப் பாலம் பெருமளவில் அண்மையில் அகற்றப்பட்டது. சிறிய பகுதி மட்டும் எஞ்சியிருந்த நிலையில், அதன் மீது படகு மோதி கவுழ்ந்துள்ளது’ என்றனா்.

மாவட்ட ஆட்சியா் சந்திர பிரகாஷ் சிங் கூறுகையில், ‘படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்தவா்களில் 10 போ் உயிரிழந்தனா். 17 போ் பத்திரமாக மீட்கப்பட்டனா். எஞ்சியவா்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இவா்கள் அனைவரும் பஞ்சாபிலிருந்து சுற்றுலா வந்தவா்கள்’ என்றாா்.

Advertisement