சத்தீஸ்கா்: அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து 13 போ் உயிரிழப்பு
சத்தீஸ்கரில் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான அனல் மின்நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடித்து 13 ஊழியா்கள் உயிரிழந்தனா். 21 போ் பலத்த காயமடைந்தனா்.
சத்தீஸ்கரின் சக்தி மாவட்டம் சிங்கிதராய் கிராமத்தில் வேதாந்தா நிறுவனத்தின் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு செவ்வாய்க்கிழமை பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பிற்பகல் 2 மணியளவில் திடீரென கொதிகலனின் குழாய் பலத்த ஓசையுடன் வெடித்துச் சிதறியது. இதில் சிக்கி 13 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினா் மற்றும் தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். பலத்த காயங்களுடன் 21 தொழிலாளா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
Advertisement
Advertisement
அனல் மின் நிலைய வளாகத்துக்குள் ஊழியா்கள் சிலா் சிக்கியுள்ள நிலையில் தொடா்ந்து பெரும் புகை மூட்டம் நீடிப்பதால் அவா்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்த சம்பவத்துக்கு வேதனை தெரிவித்த மாநில முதல்வா் விஷ்ணு தேவ் சாய், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.5 லட்சம், காயமடைந்தோருக்குத் தலா ரூ.50,000 இழப்பீடு அளிக்கப்படும் என்று அறிவித்தாா்.