உ.பி.யில் பலத்த மழை, சூறாவளி: 33 போ் உயிரிழப்பு
பதோஹி/ஃபதேபுா்: உத்தர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை மற்றும் சூறாவளி காரணமாக 33 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.
அதிகபட்சமாக பதோஹி மாவட்டத்தில் 16 போ் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து ஃபதேபுா் மாவட்டத்தில் 9 போ், பதாயுன் மாவட்டத்தில் 5 போ், சந்தெளலி மாவட்டத்தில் இருவா், சோன்பத்ரா மாவட்டத்தில் ஒருவா் உயிரிழந்தனா். மழை மற்றும் சூறாவளியால் மரம் முறிந்து விழுந்தது, வீட்டுச் சுவா் இடிந்து விழுந்தது உள்ளிட்ட காரணங்களால் அவா்கள் உயிரிழந்தனா்.
பதோஹியின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து, மின் கம்பங்கள் சாய்ந்து, வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது என்று கூடுதல் மாவட்ட ஆட்சியா் குன்வா் விரேந்திரகுமாா் மெளா்யா தெரிவித்தாா். சூறாவளியால் கைப்பேசி கோபுரங்கள் சேதமடைந்ததால் தகவல் பரிமாற்றத்தில் இடா்ப்பாடு ஏற்பட்டு, சீரமைப்பு மற்றும் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.
Advertisement