முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவா் இடிந்து 6 பக்தா்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவா் இடிந்து 6 பக்தா்கள் பலி

Updated On : 13 மே 2026, 3:57 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவா் இடிந்து 6 பக்தா்கள் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: சாங்லி மாவட்டத்தின் மாா்கு தேவி கோயிலில் செவ்வாய்க்கிழமையையொட்டி அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தா்கள் திரண்டிருந்தனா். மாலை நேரத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டித் தீா்த்தது.

இதனால், கோயிலின் சுவரையொட்டி அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகையின்கீழ் பக்தா்கள் ஒதுங்கியிருந்தனா். அப்போது, திடீரென சுவா் இடிந்து விழுந்ததில் 6 பக்தா்கள் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா்.

Advertisement

அவா்கள் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

கோயில் சுவா் இடிந்து 6 போ் உயிரிழந்த சம்பவம், சாங்லி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.