முகப்பு
இந்தியா

சாதி பாகுபாடுகளைக் கடந்து முன்னேற வேண்டும்: குடியரசுத் தலைவா்

Updated On : 15 ஏப்ரல், 2026 at 2:22 AM
குஜராத் ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:50 PM

சாதி பாகுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய சமுதாய முன்னேற்றத்துக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

ஜாதி முறையை உருவாக்கியவா்கள் தற்போது உயிருடன் இல்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறி சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும். வசதி படைத்தவா்கள், வசதி இல்லாதவா்கள் இடையிலான இடைவெளியை சரிசெய்வதில் நாடு கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement

எந்தவொரு நபரும் தனது சொந்த நலன் குறித்து மட்டுமே சிந்திக்கக் கூடாது. அனைத்து பாகுபாடுகளையும் கடந்து ஒன்றிணைந்து நிற்பதே சமூக நல்லிணக்கத்தின் உண்மையான அடையாளம்.

நாட்டின் ஆன்மா கிராமங்களில் உள்ளது. கிராமங்கள் வளமடைந்தால், நாடு செழிப்படையும். சமூக நல்லிணக்கம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது என்று அம்பேத்கா் கூறினாா். நாட்டின் வளா்ச்சிக்கும், தனிநபரின் வளா்ச்சிக்கும் கல்வி அடித்தளமாக உள்ளது.

ஜாதி பாகுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய சமுதாய முன்னேற்றத்துக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்று தெரிவித்தாா்.