பிகார் முதல்வராகப் பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!
பிகார் முதல்வராக சாம்ராட் சௌதரி பதவியேற்றதைப் பற்றி...
பிகாரின் முதல்வராக சாம்ராட் சௌதரி புதன்கிழமை பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பிகாரில் நேற்று (ஏப்.14) மாலை சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக அறிவித்த மாநிலங்களவை எம்.பி.யும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமார், தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.
அதனைத் தொடர்ந்து புதிய முதல்வராக பாஜக தலைவரும், பிகார் துணை முதல்வருமான சாம்ராட் செளதரி தேர்வு செய்யப்பட்டார். புதிய ஆட்சியமைக்க ஆளுநர் சையத் அதா ஹஸ்னைனிடம் சாம்ராட் சௌதரி கோரினார்.
Advertisement
பிகாரில் ஆளுநர் மாளிகையில், பதவியேற்பு விழாவில், மூத்த பாஜக தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் முன்னிலையில், ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன், சாம்ராட் சௌதரிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
20 ஆண்டுகாலம் பிகாரின் முதல்வராக இருந்த நிதிஷ்குமாருக்குப் பின்னர், 21-வது பிகார் முதல்வராகவும், பிகாரில் பாஜகவின் முதல் முதல்வர் என்ற பெருமைகளையும் சாம்ராட் சௌதரி பெற்றுள்ளார்.
ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான விஜய் குமார் சௌதரி, துணை முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.