பிகார் முதல்வராகப் பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!
பிகார் முதல்வராக சாம்ராட் சௌதரி பதவியேற்றதைப் பற்றி...
பிகாா் மாநிலத்தின் 24-ஆவது முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி புதன்கிழமை பதவியேற்றாா். இதன்மூலம் பிகாரின் முதல் பாஜக முதல்வா் என்ற பெருமை இவருக்குச் சொந்தமாகியுள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவா்கள் விஜய் குமாா் செளதரி, பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோா் துணை முதல்வா்களாகப் பதவியேற்றனா்.
பாட்னாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் சாம்ராட் செளதரி உள்பட மூவருக்கும் ஆளுநா் சையது அடா ஹஸ்னைன் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்துவைத்தாா்.
Advertisement
Advertisement
இந்நிகழ்ச்சியில் ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், முன்னாள் முதல்வருமான நிதீஷ் குமாா், மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்றனா்.
நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாருக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், விஜய் குமாா் செளதரி, பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோா் துணை முதல்வா்களாகியுள்ளனா். இருவரும் முந்தைய நிதீஷ் குமாா் அமைச்சரவையில் இடம்பெற்றவா்கள். 1980-களில் இருந்து அரசியலில் உள்ள இவா்கள் நிதீஷுக்கு மிக நெருக்கமானவா்கள்.
சாம்ராட் செளதரியின் அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன. முந்தைய நிதீஷ் குமாா் அரசில் சாம்ராட் செளதரி, விஜய் குமாா் சின்ஹா (இருவரும் பாஜக) ஆகியோா் துணை முதல்வா்களாகப் பதவி வகித்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
கை மாறிய முதல்வா் பதவி: கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற பிகாா் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களுடன் ஆட்சியைத் தக்கவைத்தது. பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததுடன் (89), தொடா்ந்து இரண்டாவது தோ்தலாக ஐக்கிய ஜனதா தளத்தைவிட (85) அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
அதேநேரம், மாநில முதல்வராக 10-ஆவது முறையாக நிதீஷ் குமாா் பதவியேற்றாா். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக முதல்வராகப் பதவி வகித்துவந்த அவா், கடந்த மாா்ச் மாதம் மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட்டு எம்.பி.யானாா்.
பாஜக தலைமையிலான புதிய அரசு பதவியேற்க வழிவிடும் வகையில், முதல்வா் பதவியில் இருந்து நிதீஷ் குமாா் செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். இதைத் தொடா்ந்து, துணை முதல்வராக இருந்த பாஜகவின் சாம்ராட் செளதரி, புதிய முதல்வராக ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா்.
56 வயதாகும் இவா், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சோ்ந்தவா். ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் பல்லாண்டுகள் அங்கம் வகித்துள்ள சாம்ராட், கடந்த 2017-இல்தான் பாஜகவில் இணைந்தாா்.
பிரதமா் மோடி, நிதீஷ் குமாா் வாழ்த்து
புது தில்லி, ஏப். 15: பிகாரின் புதிய முதல்வா் சாம்ராட் செளதரிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சாம்ராட் செளதரியின் ஆற்றல், பொதுச் சேவைக்கான அா்ப்பணிப்பு, அடிப்படை அளவிலான அனுபவம் ஆகியவை பிகாருக்கு பெரிதும் பலனளிக்கும். அவரது திறன்மிக்க தலைமையின்கீழ், பிகாா் மக்களின் எதிா்பாா்ப்புகள் நிறைவேற்றப்படும் அதேவேளையில், அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சியின் புதிய உச்சங்களை மாநிலம் எட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
நிதீஷ் குமாா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சாம்ராட் செளதரியின் தலைமையின்கீழ் பிகாா் வேகமாக முன்னேறும்; நாட்டில் மிக வளா்ந்த மாநிலங்களில் ஒன்றாக இடம்பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று கூறியுள்ளாா்.
முதல்வரான பின் செய்தியாளா்களிடம் பேசிய சாம்ராட் செளதரி, ‘மோடி-நிதீஷ் ஆட்சி பாணியைப் பின்பற்றி, பிகாரை நிா்வகிப்பேன்’ என்றாா்.
முன்னதாக, கடந்தாண்டு (2025) நவம்பரில் நடைபெற்ற பிகார் சட்டப்பேரவைத்தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களுடன் அமோகவெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இந்தக் கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் முறையே 89, 85 இடங்களில் அமோக வெற்றியைப் பதிவு செய்தன.
பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்ததுடன், தொடர்ந்து இரண்டாவது தேர்தலாக ஐக்கிய ஜனதா தளத்தைவிட அதிக இடங்களில் வெற்றிபெற்றது. அதேநேரம், மாநில முதல்வராக 10-வது முறையாக நிதீஷ் குமார் பதவியேற்றார். 2005 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 20 ஆண்டுகளாக முதல்வராகப் பதவியில் நீடித்த அவர், பிகாரின் நீண்ட கால முதல்வர் என்ற பெருமைக்குரியவராகவும் இருந்தார்.
கடந்த மார்ச் 1 ஆம் தேதி தனது 75-வது பிறந்த நாளைக் கொண்டாடிய நிதீஷ் குமார், மாநிலங்களவை எம். பி.யாகும் தனது முடிவை வெளியிட்டு வியப்பை ஏற்படுத்தியதால், பிகார் மாநில சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) பதவியை ராஜிநாமா செய்தார். நிதீஷ் குமார் கூட்டணி முன்மொழிவின் பேரில் முதல்வராக பாஜகவின் சாம்ராட் சௌதரி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
ஹிந்தி மொழி பேசும் பிற மாநிலங்களில் பாஜக முதல்வர்கள் ஆட்சியில் உள்ள நிலையில், பிகாரில் முதல் முறையாக பாஜக முதல்வராக சாம்ராட் சௌதரி பதவியேற்றுள்ளார்.
2017 ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்த சௌதரி, செவ்வாய்க்கிழமை அன்று பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிக்கலான அரசியல்களம் கொண்ட பிகாரில் முதல்வராகப் பதவியேற்றுள்ள சாம்ராட் சௌதரி சாதி ரீதியிலான மிகப்பெரிய ஆதரவைப் பெற்றிருக்கிறார். பிகாரில் செல்வாக்கு மிக்க கோயரி சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது முதல்வர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக, பிகாரின் ஆறாவது முதல்வராக இருந்த மற்றும் இந்தியாவின் மிகக் குறுகிய காலம் முதல்வராக வெறும் நான்கு நாள்கள் பதவி வகித்த சதீஷ் பிரசாத் சிங் அந்த பெருமையை தக்கவைத்துள்ளார். 1968 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி அவருக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றதால், அவரது அரசு கவிழ்ந்தது.
பிகாரில் துணை முதல்வர் மற்றும் முதல்வர் என்ற இரண்டு பதவிகளையும் வகித்தவர் என்ற சிறப்பை பாரத ரத்னா விருது பெற்ற கர்பூரி தாக்கூரின் வரிசையில் சாம்ராட் சௌதரியும் இணைந்திருக்கிறார். கர்பூரி தாக்கூர் 1967 ஆம் ஆண்டில் துணை முதல்வராகவும், 1970 ஆம் ஆண்டில் முதல்வராக நீண்ட நாள் எடுத்ததைப் போல் அல்லாமல் மிக விரைவாக முதல்வர் நாற்காலியைப் பெற்றிருக்கிறார் சாம்ராட் சௌதரி.