புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்!
முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தை ஜேடியு தலைவர் நிதீஷ் குமார் காலி செய்து புதிய முகவரிக்கு குடிபெயர்ந்துள்ளார்.
முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தை ஜேடியு தலைவர் நிதீஷ் குமார் காலி செய்து புதிய முகவரிக்கு குடிபெயர்ந்துள்ளார்.
"நாங்கள் 1 அன்னே மார்க் (அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லம்) இல்லத்திலிருந்து 7 சர்க்குலர் சாலையில் உள்ள வீட்டிற்கு மாறிவிட்டோம். இனி அங்கு வசிப்போம்," என்று நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், நிஷாந்த் புத்த பூர்ணிமா திருநாளை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். 1 அன்னே மார்க் இல்லம், 2006 ஆம் ஆண்டில் பிகார் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக அறிவிக்கப்பட்டது.
Advertisement
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற பிகாா் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களுடன் ஆட்சியைத் தக்கவைத்தது. பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததுடன் (89), தொடா்ந்து இரண்டாவது தோ்தலாக ஐக்கிய ஜனதா தளத்தைவிட (85) அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
அதேநேரம், மாநில முதல்வராக 10-ஆவது முறையாக நிதீஷ் குமாா் பதவியேற்றாா். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக முதல்வராகப் பதவி வகித்துவந்த அவா், கடந்த மாா்ச் மாதம் மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட்டு எம்.பி.யானாா்.
பின்னர் நிதீஷ் குமார் தனது முதல்வர் பதவியை ஏப்ரல் 14ஆம் தேதி ராஜிநாமா செய்தார். தொடர்ந்து, பிகாா் மாநிலத்தின் 24-ஆவது முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி பதவியேற்றாா்.
JD(U) national president Nitish Kumar on Friday vacated the Bihar chief minister's official residence, which he occupied for around two decades, and shifted to a new address.