தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டிருப்பது குறித்து...
தமிழ்நாட்டின் புதிய தமிழக காவல்துறை தலைமை இயக்குநராக(டிஜிபி) மகேஷ் குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய டிஜிபி சந்தீப் ராய் ரத்தோருக்குப் பதிலாக, மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
டிஜிபி நியமன விவகாரத்தில் தமிழகத்தில் முன்பு ஆட்சியில் இருந்த திமுக அரசுக்கும், யுபிஎஸ்சிக்கும் இடையே மாதக்கணக்கில் இணக்கமற்ற நிலை நீடித்து வந்தது. இதன் காரணமாக, திமுக ஆட்சியில் பணிமூப்பு அடிப்படையில் தகுதி பெற்ற மூத்த அதிகாரிகளில் இளையவரான வெங்கட்ராமன் பொறுப்பு டிஜிபி-யாக முந்தைய திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் காலத்தில் அவர் அந்தப் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு தேர்தல் ஆணைய அனுமதியுடன் மூத்த ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் ராய் ரத்தோர் தமிழக டிஜிபி மற்றும் காவல் படைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தேர்தல் காலத்தில் டிஜிபி தேர்வுக்கான கூட்டத் தேதி வந்ததால், தோ்தலுக்குப் பிறகு அக்கூட்டத்தை யுபிஎஸ்சி தள்ளிவைத்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற யுபிஎஸ்சி- டிஜிபி நியமனத்துக்கான உயர்நிலை தேர்வுக் குழுக் கூட்டத்தில் யுபிஎஸ்சி மற்றும் மத்திய உள்துறை உயரதிகாரிகள், தமிழக தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதில் பதவி மூப்பு அடிப்படையில் ராஜீவ் குமாா், சந்தீப் ராய் ரத்தோா், மகேஷ் குமார் அகர்வால் ஆகிய மூன்று உயரதிகாரிகளின் பெயர்களுக்குத் தேர்வாணையம் ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த மகேஷ் குமார் அகர்வால்?
மகேஷ் குமார் அகா்வால் மத்திய பணியில் எல்லை காவல் படையின் சிறப்பு டிஜிபி-யாக உள்ளார்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தவர். தனது சிறந்த பணிகளுக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.