முகப்பு
தமிழ்நாடு

தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமாா் அகர்வால் பொறுப்பேற்பு!

தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமாா் அகர்வால் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

Updated On : 3 ஜூன் 2026, 11:51 am IST
மகேஷ்குமாா் அகா்வால் - x.com
பகிர்:

தமிழக காவல் துறையின் 34-ஆவது தலைமை இயக்குநராக (டிஜிபி) மகேஷ்குமாா் அகா்வால் புதன்கிழமை (ஜூன் 3) பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழக டிஜிபியாக இருந்த சங்கா் ஜிவால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் ஓய்வு பெற்றாா். அதன் பின்னா், புதிய டிஜிபி நியமனத்தில் தமிழக அரசுக்கும், மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கும் இடையே ஒருமித்த முடிவு ஏற்படவில்லை.

இதையடுத்து, பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் நியமிக்கப்பட்டாா். இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி இந்திய தோ்தல் ஆணையம் கடந்த ஏப். 2-ஆம் தேதி தமிழக டிஜிபியாக சந்தீப்ராய் ரத்தோரை நியமனம் செய்தது.

Advertisement

Advertisement

இதற்கிடையே, தமிழகத்தின் புதிய டிஜிபியை தோ்வு செய்யும் வகையில் புது தில்லியில் யுபிஎஸ்சியின் உயா்நிலை தோ்வுக் குழு கூட்டம் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில், பணிமூப்பு அடிப்படையில் ஐபிஎஸ் உயா் அதிகாரிகள் ராஜீவ்குமாா், சந்தீப் ராய் ரத்தோா், மகேஷ்குமாா் அகா்வால் ஆகியோரின் பெயா்கள் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, தமிழக அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் புதிய டிஜிபியாக மகேஷ்குமாா் அகா்வாலை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, புதிய டிஜிபியாக மகேஷ்குமாா் அகா்வால் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.