அரவிந்த் கேஜரிவால் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!
அரவிந்த் கேஜரிவால் காணொலி வாயிலாக மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராவது பற்றி..
தில்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் இன்று பிற்பகல் காணொலி வாயிலாக மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில்,
அரவிந்த் கேஜரிவால் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதி ஸ்வர்ணகாந்த சர்மா முன்னிலையில் காணொலிக் காட்சி மூலம் ஆஜராகி நிலுவையில் உள்ள தனது புதிய பிரமாணப் பத்திரத்தைப் பதிவு செய்ய வலியுறுத்துவார்.
Advertisement
அவர் ஆஜராகும் காணொலிகள் உடனடியாக அகற்றப்படுகின்றன. ஆனால், தீவிர முரண்பாட்டை எழுப்பும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டால், அவர் நீதிமன்றத்திற்கு வர வேண்டும்.
தனது பிரமாணப் பத்திரத்தில் அரசு வழக்குகள் சட்ட அதிகாரிகள் மற்றும் குழு வழக்குரைஞர்களுக்கு ஒதுக்கப்படும் நிறுவன ரீதியான செயல்முறையில் கேஜரிவால் கவனம் செலுத்துகிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.