முகப்பு
இந்தியா

வரலாறு படைக்க ஒன்றிணைவோம்: பிரதமர் மோடி டிவீட்

குடும்பத்தில் உள்ள பெண்களை நினைத்து, மனசாட்சியோடு சிந்தித்து செயல்படுங்கள் என பிரதமர் மோடி டிவீட் செய்துள்ளார்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 3:12 PM
பிரதமர் நரேந்திர மோடி - படம்: பிடிஐ.
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 3:11 PM

உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை நினைத்து மனசாட்சியோடு சிந்தித்து செயல்படுங்கள் என பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை திருத்தவும், தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கவும் வகை செய்யும் மூன்று மசோதாக்கள் மீது இன்று மாலை வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது.

வியாழக்கிழமை முதல் மக்களவையில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு கோரிக்கை வைக்கிறேன்,

Advertisement

உங்கள் குடும்பங்களில் உள்ள பெண்களை நினைவுகூர்ந்து, உங்கள் மனசாட்சியைச் சிந்தித்துப் பார்த்து செயல்படுங்கள். சட்டப்பேரவைகள், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு அதிகாரம் வழங்க வகை செய்யும் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத் திருத்தம், நம்முடைய நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் நீதி கிடைப்பதற்கான சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

நம்முடைய நாட்டின் மகளிர் சக்திக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதை தடுக்க வேண்டாம். இந்த சட்டத்திருத்தம் எதிர்ப்பில்லாமல் நிறைவேற்றப்படுவது நம்முடைய நாட்டின் பெண்கள் புதிய சக்தி பெறவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.