நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் முடிந்த நிலையில் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் முடிந்த நிலையில் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.
தொகுதி மறுவரையறை மசோதா, மகளிர் மசோதா தாக்கலுக்காக 3 நாள் சிறப்பு அமர்வு ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்கியது. இரண்டு நாள்கள் விவாதத்துக்குப் பின் மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.
மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 298 வாக்குகள் மட்டுமே ஆதரவாகப் பெறப்பட்டன. இதனையடுத்து, எதிர்க்கட்சிகளால் மசோதா தோற்கடிக்கப்பட்டது.
Advertisement
மகளிர் மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்களும் மக்களவையில் நிறைவேறாமல் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று வந்தே மாதரம் முழு வடிவத்தில் இசைக்கப்பட்டு கூட்டத் தொடர்ந்த நிறைவடைந்தது.
இதன்மூலம், ஜனவரி 28ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.