ஐ.நா. பொதுச் செயலருடன் இந்திய வெளியுறவு அதிகாரி சந்திப்பு
அமெரிக்காவில் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை இந்திய வெளியுறவுத் துறையின் மேற்குப் பிரிவுச் செயலா் சிபி ஜாா்ஜ் சந்தித்துப் பேசினாா்.
இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா.பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை, இந்திய வெளியுறவு அமைச்சக மேற்குப் பிரிவுச் செயலரும் தூதருமான சிபி ஜாா்ஜ் சந்தித்துப் பேசினாா்.
பல நாடுகள் ஒன்றிணைந்து பொதுவான இலக்கை எட்ட முயற்சிப்பதில், இந்தியா மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளதாக குட்டெரெஸிடம் சிபி ஜாா்ஜ் தெரிவித்தாா்.
Advertisement
ஐ.நா. சீா்திருத்தங்கள், தெற்குலகுக்கு வலுவான குரலை ஏற்படுத்துவது குறித்து இருவரும் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனா் என்று தெரிவித்தாா்.