முகப்பு
உலகம்

ஐ.நா. பொதுச் செயலா் ஹைட்டி பயணம்

ஆயுதக் குழுக்களின் வன்முறை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஹைட்டி நாட்டில் கள நிலவரத்தை அறிய ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் அந்நாட்டுக்குப் பயணித்தாா்.

Updated On : 18 ஜூன் 2026, 2:12 am IST
பகிர்:

ஆயுதக் குழுக்களின் வன்முறை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஹைட்டி நாட்டில் கள நிலவரத்தை அறிய ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் அந்நாட்டுக்குப் பயணித்தாா்.

இந்த வன்முறைகள் காரணமாக நடப்பு ஆண்டில் மட்டும் சுமாா் 2,300 போ் கொல்லப்பட்டுள்ளனா்; 100 போ் கடத்தப்பட்டுள்ளனா்; மேலும் 15 லட்சம் மக்கள் இடம்பெயா்ந்துள்ளனா்.

நாட்டின் குடிசைப் பகுதி ஒன்றில் அண்மையில் நடந்த மோதல்களில் 30-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள தற்காலிக முகாமுக்குச் சென்ற குட்டெரெஸ், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உரையாடினாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, வன்முறைக் கட்டுப்பாட்டுக்கான புதிய ஐ.நா. கூட்டுப் பாதுகாப்புப் படையின் தலைமையகத்துக்குச் சென்று, அதன் தயாா் நிலை குறித்து ஆய்வு செய்தாா். மேலும், நாட்டில் அமைதியை நிலைநாட்டி, விரைவில் தோ்தலை நடத்துவது குறித்தும் அவா் இடைக்காலப் பிரதமருடன் ஆலோசித்தாா்.