மேற்கு வங்கம்: வாக்களித்தார் சுவேந்து அதிகாரி!
எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி வாக்களித்தார்.
மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர்.
அதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, பாஜகவின் திலீப் கோஷ், காங்கிரஸின் மௌசம் பெனசீர் நூர், திரிணமூல் காங்கிரஸின் உதயன் குஹா உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர்.
கிழக்கு மேதினிப்பூர் மாவட்டத்தில் காந்தி நகரில் உள்ள நந்தனாயக்பார் தொடக்கப்பள்ளியில், சுவேந்து அதிகாரி தனது வாக்கைச் செலுத்தினார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி, மக்கள் அமைதியான முறையில் வாக்கெடுப்பு நடைபெறுவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினார்.
Advertisement
திரிணமூல் காங்கிரஸ் பெரிய அளவில் குழப்பங்களை ஏற்படுத்தவில்லை. இனியும் அவர்களால் அதைச் செய்ய முடியாது. மேலோட்டமாகப் பார்க்கும்போது, தேர்தல் ஆணையமும் மத்தியப் படைகளும் பாராட்டுக்குரியவர்கள் என்று அவர் கூறினார்.
மமதா பானர்ஜி மற்றும் அவரது கட்சித் தொண்டர்களின் அட்டூழியங்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்காக, பெண்கள், சநாதன ஹிந்துக்கள், பிற தேசியவாத சமூகங்கள் ஒன்றிணைந்துள்ளதால், இந்த வாக்கெடுப்பு இரட்டிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது என்று அவர் மேலும் கூறினார்.