ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை பனிச்சரிவு ஏற்பட்டது.
ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை பனிச்சரிவு ஏற்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை பனிச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
ஷைத்தான் நல்லாக் என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சில வாகனங்கள் சிக்கியதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
Advertisement
Advertisement
பனிச்சரிவுக் குப்பைகளை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
summary