வாக்களித்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா!
மத்திய அமைச்சர் அமித் ஷா வாக்களித்தது குறித்து...
குஜராத்தில் நடைபெற்றுவரும் உள்ளாட்சித் தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்களித்தார்.
முன்னதாக, குஜராத்தில் மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் எனவும், அதே வேளையில் வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் திட்டமிட்டபடி இன்று தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, குஜராத்தில் உள்ள 15 மாநகராட்சிகள், 84 நகராட்சிகள், 34 மாவட்ட ஊராட்சிகள், 260 தாலுகா பஞ்சாயத்துகள் மற்றும் 11 நகராட்சிகளில் காலியாக உள்ள 13 இடங்களுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்று வருகின்றன.
Advertisement
இந்த நிலையில், காந்திநகரில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வாக்கைச் செலுத்தினார். அவருடன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவர் ஜெய் ஷாவும் தனது வாக்கைச் செலுத்தினார்.
குஜராத் உள்ளாட்சித் தேர்தலின் ஒரு பகுதியாக நகர்ப்புற மற்றும் மாவட்ட அளவிலான அமைப்புகளுக்கு மட்டுமே இன்று வாக்குப்பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.