மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி சாலைவலம்!
மேற்கு வங்க தேர்தலையொட்டி பாரக்பூரில் பிரதமர் மோடி சாலைவலம் மேற்கொண்டது பற்றி...
மேற்கு வங்க தேர்தலையொட்டி பாரக்பூரில் பிரதமர் மோடி சாலைவலம் மேற்கொண்டார்.
மேற்குவங்கத்தில் முதல்கட்டத் தேர்தல் கடந்த ஏப். 23 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப். 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
அதன்படி மேற்குவங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
Advertisement
Advertisement
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மேற்குவங்கத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
நேற்று கொல்கத்தா வந்த மோடி, காளி கோயிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரசாரத்தைத் தொடங்கினார்.
இன்று கால பாரக்பூரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். மேற்குவங்கத்தில் பாஜக அரசு அமையும் என்றும் மே 4-க்குப் பிறகு பாஜக அரசு பதவியேற்புக்கு வருவேன் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பாரக்பூரில் பிரதமர் மோடி சாலைவலம் மேற்கொண்டார். திரளான மக்கள் கூடி அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
West Bengal Assembly Elections: PM Modi held a roadshow in Barrackpore
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.