முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி சாலைவலம்!

மேற்கு வங்க தேர்தலையொட்டி பாரக்பூரில் பிரதமர் மோடி சாலைவலம் மேற்கொண்டது பற்றி...

Updated On : 27 ஏப்ரல், 2026 at 3:41 PM
பாரக்பூரில் பிரதமர் மோடி சாலைவலம் - X / ANI
பகிர்:

மேற்கு வங்க தேர்தலையொட்டி பாரக்பூரில் பிரதமர் மோடி சாலைவலம் மேற்கொண்டார்.

மேற்குவங்கத்தில் முதல்கட்டத் தேர்தல் கடந்த ஏப். 23 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப். 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

அதன்படி மேற்குவங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

Advertisement

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மேற்குவங்கத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

நேற்று கொல்கத்தா வந்த மோடி, காளி கோயிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரசாரத்தைத் தொடங்கினார்.

இன்று கால பாரக்பூரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். மேற்குவங்கத்தில் பாஜக அரசு அமையும் என்றும் மே 4-க்குப் பிறகு பாஜக அரசு பதவியேற்புக்கு வருவேன் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பாரக்பூரில் பிரதமர் மோடி சாலைவலம் மேற்கொண்டார். திரளான மக்கள் கூடி அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

West Bengal Assembly Elections: PM Modi held a roadshow in Barrackpore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.