மேற்கு வங்கத்தில் தாமரை மலர்ந்தது! தலைவணங்குகிறேன்! பிரதமர் மோடி
மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது பற்றி பிரதமர் மோடி பதிவு....
மேற்கு வங்கத்தில் தாமரை மலர்ந்தது எனவும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தலைவணங்குவதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் பாஜக 200க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
இன்று மாலை 6 மணி நிலவரப்படி பாஜக 205, திரிணமூல் காங்கிரஸ் 82, காங்கிரஸ் 2, இடதுசாரி 2 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. இவற்றில் 57 தொகுதிகளுக்கு வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேற்கு வங்கத்தில் மமதாவின் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி பாஜக முதல்முறையாக ஆட்சியமைக்க உள்ளது.
இதுபற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில்,
“2026-ஆம் ஆண்டு மேற்கு வங்க தேர்தல் என்றென்றும் நினைவுகூரப்படும். மக்கள் சக்தி மேலோங்கியுள்ளது. பாஜக-வின் வெற்றி வாகை சூடியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் நான் தலைவணங்குகிறேன்.
மக்கள் பாஜக-விற்கு ஒரு மகத்தான மக்கள் கட்டளையை வழங்கியுள்ளனர். மேற்கு வங்க மக்களின் கனவுகளையும் லட்சியங்களையும் நிறைவேற்ற, எங்கள் கட்சி தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று நான் உறுதியளிக்கிறேன். சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் வாய்ப்பையும் கண்ணியத்தையும் உறுதிசெய்யும் ஒரு அரசை நாங்கள் அமைப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.