மேற்கு வங்கத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் தொடக்கம்!
மேற்கு வங்கத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் தொடங்கப்பட்டது குறித்து...
மேற்கு வங்கத்தில் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டத்தை அந்த மாநில அரசு திங்கள்கிழமை (ஜூன் 1) தொடங்கியுள்ளது.
மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் உள்ள 294 தொகுதிகளில் 208 தொகுதிகளில் வெற்றிபெற்று, மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்தது. சுவேந்து அதிகாரி முதல்வராகப் பதவியேற்றது முதல் சில முக்கியத் திட்டங்களை அந்த மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.
பாஜக தனது சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின் படி, அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணத்தை அரசு இன்று முதல் தொடங்கியுள்ளது என்று அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைவதாகவும் இருப்பினும், பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
மேற்கு வங்க போக்குவரத்து கழகம், தெற்கு வங்க மாநில போக்குவரத்து கழகம் மற்றும் வடக்கு வங்க மாநில போக்குவரத்து கழகம் ஆகியவற்றின் அனைத்து பேருந்துகளிலும் இன்று (ஜூன் 1) முதல் பெண்களுக்கு அரசாங்கம் இலவசப் பயணத்தை அரசு அறிவித்துள்ளது.
மேலும், இந்தத் திட்டத்தை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாத வகையில், புகைப்படத்துடன் கூடிய டிஜிட்டல் ஸ்மார்ட் அட்டைகளையும் மகளிருக்கு அரசு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.