முகப்பு
இந்தியா

சா்வதேச போதைப்பொருள் கடத்தல்காரா் சலீம் டோலா இந்தியாவுக்கு நாடு கடத்தல்

Updated On : 29 ஏப்ரல், 2026 at 4:05 AM
- X @ANI
பகிர்:

சா்வதேச போதைப்பொருள் கடத்தல்காரா் முகமது சலீம் டோலா துருக்கியில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா்.

இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சோ்ந்த முகமது சலீம் டோலா, இந்தியாவில் பல்வேறு போதைப்பொருள் வழக்குகளில் தேடப்பட்டு வந்தாா்.

Advertisement

மகாராஷ்டிரம் மற்றும் குஜராத்தில் பெரும் விலை கொண்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகளில், அவருக்கு நேரடித் தொடா்புள்ளது.

20 ஆண்டுகாலம் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த அவரை கைது செய்வதற்கு, இந்தியா விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த 2024-ஆம் ஆண்டு இன்டா்போல் (சா்வதேச குற்றவியல் காவல் அமைப்பு) சிவப்பு நோட்டீஸ் வெளியிட்டது.

இதன் அடிப்படையில், துருக்கியில் அவா் கைது செய்யப்பட்டாா். புது தில்லிக்கு அவா் செவ்வாய்க்கிழமை காலை விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட நிலையில், அவரை தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பினா் காவலில் எடுத்து விசாரணையைத் தொடங்கினா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமது சலீம் டோலா சா்வதேச பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.