முகப்பு
இந்தியா

காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க உத்தரவு!

தமிழ்நாட்டிற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

Updated On : 29 ஏப்ரல் 2026, 1:12 pm IST
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதிகள் - கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்திற்கு மே மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடகத்துக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்.கே. ஹல்தார் தலைமையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தில்லியில் இன்று(புதன்கிழமை) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி அரசுகளின் பிரதிநிதிகள் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர். தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் நீர்வளத்துறை செயலர் ஜெ.ஜெயகாந்தன் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு தலைவர் இரா.சுப்பிரமணியன் ஆகியோர் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

மாநிலங்களின் கருத்துகளைக் கேட்ட ஆணையம், இறுதியாக தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

summary

Cauvery Water Management Authority Order Issued to Release 2.5 TMC of Water to Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments