காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க உத்தரவு!
தமிழ்நாட்டிற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு
தமிழகத்திற்கு மே மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடகத்துக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்.கே. ஹல்தார் தலைமையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தில்லியில் இன்று(புதன்கிழமை) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி அரசுகளின் பிரதிநிதிகள் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர். தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் நீர்வளத்துறை செயலர் ஜெ.ஜெயகாந்தன் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு தலைவர் இரா.சுப்பிரமணியன் ஆகியோர் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.
Advertisement
மாநிலங்களின் கருத்துகளைக் கேட்ட ஆணையம், இறுதியாக தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.