முகப்பு
இந்தியா

இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள் தொகை ஒருபோதும் ஹிந்துக்களை மிஞ்சாது: ஓவைசி

முஸ்லிம் மக்கள் தொகை குறித்த ஓவைசி கருத்து..

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 6:44 AM
ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி - DPS
பகிர்:

இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள்தொகை ஒருபோதும் ஹிந்துக்களின் மக்கள் தொகையை மிஞ்சாது என் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.

தெலங்கானாவில் நடைபெறவுள்ள நகராட்சித் தேர்தல்களுக்கு முன்னதாக, நிஜாமாபாத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் ஆற்றிய உரையில், ஒட்டுமொத்த உலகின் மக்கள் தொகையும் வயதாகி வரும் நிலையில், இந்தியாவின் மக்கள் தொகை இளமையாக இருக்கிறது என்று மோடி கூறியிருந்தார்.

நாட்டின் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் 40 வயதுக்குள்பட்டவர்கள் என்றால், அவர்களுக்கான வேலை வாய்ப்புகளுக்குப் பிரதமர் என்ன செய்தார், அவர்களுக்கு என்ன திறன்கள் கற்பிக்கப்பட்டுள்ளன என்று அவர் கேள்வி எழுப்பினார்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இளம் மக்கள் தொகைக்கு வயதாகிவிடும். பணவீக்கம் எவ்வளவு இருக்கும், அவர்கள் எவ்வளவு செலவழிக்க வேண்டியிருக்கும் என்பதைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை.

அதற்குப் பதிலாக, முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள். முஸ்லிம்களின் மக்கள் தொகை நிலைபெறும்.

இந்தியாவில் முஸ்லிம்கள் ஒருபோதும் இந்துக்களின் மக்கள் தொகையை விட அதிகமாக மாட்டார்கள்.

25-30 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் மக்கள் தொகைக்கு வயதாகும்போது அது எப்படி இருக்கும் என்பதை அவர்கள் இப்போது புரிந்துகொள்கிறார்கள்.

ஆர்எஸ்எஸ் தலைவர்)மோகன் பாகவத் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றெடுக்குமாறு கூறுகிறார். அவரே அதைச் செய்யவில்லை என்பது வேறு விஷயம்.

முன்னர், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த ஒரு மசோதா கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டது, மேலும் அவர்கள் முஸ்லிம்களை விமர்சித்து வந்தனர். இப்போது, ​​நாட்டின் மக்கள் தொகைக்கு வயதாகும்போது அது நாட்டை எப்படிப் பாதிக்கும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியைப் பாகிஸ்தான் புறக்கணித்தது குறித்துப் பேசிய ஓவைசி, இந்தியா டி20 உலகக் கோப்பையை நடத்துகிறது, ஆனால் அந்த "பயனற்ற" பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என்று கூறுவதாகத் தெரிவித்தார்.

நீங்கள் விளையாடப் போவதில்லை என்றால், ஏன் இங்கு வந்தீர்கள், இங்கிருந்து வெளியேறுங்கள் என்று அவர்களிடம் (பாகிஸ்தானிடம்) நீங்கள் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அமைதியாக உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

summary

AIMIM president Asaduddin Owaisi has said that Muslims will never surpass the Hindu population in India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.