முகப்பு
இந்தியா

இந்தியாவை உலகுடன் இணைக்கும் தமிழ் மொழி: மலேசியாவில் பிரதமர் மோடி

இந்தியாவை தமிழ்தான் உலகுடன் இணைப்பதாக மலேசியாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி 2026, 5:40 pm IST
மலேசியாவில் பிரதமர் மோடி - பிடிஐ
பகிர்:

இந்தியாவை தமிழ்தான் உலகுடன் இணைப்பதாக மலேசியாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் பிரதமர் மோடி பேசுகையில், மலேசியாதான் இரண்டாவதாக அதிக இந்திய வம்சாவளிகளைக் கொண்டதாக உள்ளது. இந்தியா - மலேசியாவை இணைப்பதில் பலவும் பங்களிக்கின்றன. அவற்றில் கலாசாரம்தான் எங்களை இணைக்கும் உயிருள்ள பாலம்.

மலேசியாவில் பிரதமர் மோடி - பிடிஐ

தமிழ்தான், இந்தியாவை உலகுடன் இணைக்கிறது. தமிழ் இலக்கியம் முடிவற்றது; தமிழ்க் கலாசாரம் உலகளாவிய ஒன்று.

Advertisement

இந்திய திரைப்படங்களும் இசையும் மலேசியாவில் பிரபலமாக இருப்பதாக அறிகிறேன். பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஒரு பழைய ஹிந்தி பாடலை பாடிய விடியோக்களும் வைரலாகின.

புகழ்பெற்ற எம்ஜிஆரின் தமிழ்ப் பாடல்களையும் அவர் விரும்புவது ஆச்சரியமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி மூன்றாவது முறையாக மலேசியா செல்வதைத் தொடர்ந்து வர்த்தகம், பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்கள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Tamil is India’s link to the world says PM Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.