முகப்பு
இந்தியா

இந்தியாவின் முதல் டிஜிட்டல் சுங்கச் சாவடி: நெடுஞ்சாலை உள்கட்டமைப்பில் ஒரு மைல்கல்!

தேசிய நெடுஞ்சாலை-48 (என்எச்-48) சூரத் காம்ரேஜ் பகுதியில் டிஜிட்டல் சுங்கச் சாவடி...

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:44 PM
டிஜிட்டல் சுங்கச் சாவடி - PTI
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:21 PM

இந்தியாவின் முதல் டிஜிட்டல் சுங்கச் சாவடி பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து, அப்பகுதியில் வாகனங்கள் நில்லாமல் சாவடியைக் கடந்து செல்ல முடிகிறது.

தேசிய நெடுஞ்சாலை-48 (என்எச்-48) சூரத் காம்ரேஜ் பகுதியில் முழுக்க முழுக்க மின்னணு முறையில் இயங்கும் சுங்கச் சாவடி பயன்பாட்டுக்கு வந்தது. ரூ. 15 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுங்கச் சாவடியில் வாகனங்கள் நிற்கமல் கடந்து செல்லலாம்.

அதி நவீன ஸ்கேனர்கள், ஏ.என்.பி. ஆர் கேமிராக்கள், லிடார், ரேடார், உயர் தொழிநுட்பக் கட்டுப்பாட்டு அறை ஆகியவையே இந்த சுங்கச்சாவடியின் பின்புலத்தில் இருப்பவையாகும். கண்காணிப்பு கேமிராக்களில் ஃபாஸ்டேக் உதவியுடன் சுங்கச்சாவடியைக் கடந்து செல்லும் வாகனங்களின் விவரங்கள் பதிவாகி அதனை ஊழியர்கள் கண்காணிக்கின்றனர். இதனால் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர் பயன்பாட்டுடன் இந்தச் சுங்கச் சாவடி இயங்குகிறது.

Advertisement

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:38 PM

ஒரு நாளைக்கு சுமார் 25,000 வாகனங்களைக் கையாளும் இந்தச் சுங்கச் சாவடியிலிருந்து ஈட்டப்படும் வருவாய் ரூ. 60 லட்சம்.

இதனால் வாகனப் போக்குவரத்துநெருக்கடி குறைவதுடன், மாசுபாடும் குறைகிறது. மேலும், எரிபொருள் சேமிப்பு வாகன ஓட்டிகளுக்கு பலனிக்கிறது. முக்கியமாக பயண நேரம் குறைகிறது. இந்திய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பில் ஒரு புதிய சகாப்தத்துக்கு டிஜிட்டல் சுங்கச்சாவடித் திட்டம் முன்னோடியாக அமைத்துள்ளது.

summary

Surat’s Kamrej stretch on NH-48 has become home to India’s first Multi-Lane Free Flow digital toll plaza

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.