மழை மேகங்கள் சூழ்ந்திருக்கும் இந்தியா! பரவசமூட்டும் செயற்கைக் கோள் படம்!
நாட்டின் மீது மழை மேகங்கள் சூழ்ந்திருக்கும் செயற்கைக் கோள் படம்
நாட்டில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது தெற்மேற்குப் பருவமழையை. அதனைக் கொண்டு வரும் மழை மேகங்கள் இந்தியா மீது சூழ்ந்திருப்பதை காட்டும் செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.
இன்சாட்-3டிஎஸ் வானிலை செயற்கைக் கோள் புதன்கிழமை எடுத்து அனுப்பியிருக்கும் புதிய படங்களில் நாட்டின் பெரும்பலான பகுதிகளை மழை மேகங்கள் சூழ்ந்திருப்பது படம்பிடிக்கப்பட்டுள்ளது. இமாலய மலைப் பகுதி முதல், தெற்கு பகுதி வரை மழை மேகங்கள் திரண்டு காத்திருக்கின்றன. இதனால், நாட்டில் தென்மேற்குப் பருவமழைக் காலம் தொடங்க விருக்கிறது என்ற பொன்னான செய்தி காத்திருக்கிறது.