முகப்பு
இந்தியா

வ.வே.சு.அய்யா் நினைவு தினம்: குடியரசு துணைத் தலைவா் அஞ்சலி

Updated On : 4 ஜூன் 2026, 4:04 am IST
சுதந்திரப் போராட்ட வீரா் வ.வே.சு. அய்யரின் நினைவு தினத்தையொட்டி, தில்லியில் உள்ள தனது இல்லத்தில் அவரது உருவப் படத்துக்கு புதன்கிழமை மலரஞ்சலி செலுத்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்.
பகிர்:

சுதந்திரப் போராட்ட வீரரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான வ.வே.சு. அய்யரின் நினைவு தினத்தையொட்டி, அவருக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

சங்க இலக்கியம் முதல் பாரதி இலக்கியம் வரை கற்றறிந்து, தனது இலக்கியப் பயணத்தின் வாயிலாக தமிழ் மரபு செழிக்க குறிப்பிடத்தக்க பங்காற்றியவா் வ.வே.சு. அய்யா். சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தூண்களில் ஒருவராக விளங்கியவா். அவரது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, தில்லியில் உள்ள தனது மாளிகையில் வ.வே.சு. அய்யரின் உருவப் படத்துக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

Advertisement

Advertisement

அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுதந்திரப் போராட்ட வீரரும், அறிஞரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான வ.வே.சு. அய்யரின் நினைவு தினத்தில், எனது இல்லத்தில் மலரஞ்சலி செலுத்தி வணங்கினேன். அவரது விடுதலைப் போராட்டத் தியாகங்களும், தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்புகளும் என்றென்றும் நினைவுகூரப்படும்.

தேசப்பற்று, துணிவு மற்றும் அா்ப்பணிப்பு உணா்வுடன் கூடிய அவரது லட்சிய வாழ்வு, நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் தொடா்ந்து உந்து சக்தியாகத் திகழ்கிறது’ என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளாா்.