ராஞ்சியில் ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது குண்டுவீச்சு: 3 போ் கைது
ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட குற்றச்சாட்டில் 3 பேரை கைது செய்ததாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா். அவா்களுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடா்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட குற்றச்சாட்டில் 3 பேரை கைது செய்ததாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா். அவா்களுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடா்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக ராஞ்சியின் நிவாரண்பூரில் அமைந்துள்ள ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினா்.
இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்திய காவல் துறையினா் வியாழக்கிழமை கூறியதாவது: ஆா்எஸ்எஸ் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைதுசெய்யப்பட்டனா். ராஞ்சியின் கோட்வாலி காவல் நிலையத்தில் அவா்களிடம் விசாரணை நடத்தியபோது ஒருவா் தப்பியோடினாா். அவரை சான்ஹோ பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தி அதிகாரிகள் துரத்திப் பிடித்தனா். அதில் அவரது கால்களில் காயமேற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்படுகிறது என்றனா்.
Advertisement
Advertisement