முகப்பு
இந்தியா

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளிகள் கைது!

2022-ல் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் இருவரை கைது செய்தது பற்றி..

Updated On : 24 ஜூன் 2026, 1:51 pm IST
கைது - file photo
பகிர்:

மேற்கு வங்கத்தில் 2022-ல் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய இருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்தது.

ஹவுரா (ஊரகப் பகுதி) மாவட்டத்தின் அம்டா பகுதியைச் சேர்ந்த அஸ்ஃபார் மித்யா மற்றும் என்டாஜுல் மித்யா ஆகியோர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். மூன்று இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளுக்குப் பிறகு இவர்கள் கைது செய்யப்பட்டதாக என்ஐஏ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2022-ல் அம்டா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சந்திரபூர் பஜார் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். உள்ளூர் காவல்துறையிடமிருந்து இந்த வழக்கு என்.ஐ.ஏ. அமைப்பிடம் ஏப்ரல் 2024-ல் சென்றது.

Advertisement

Advertisement

குண்டு தயாரிப்பு நடவடிக்கைகளை அஸ்ஃபார் மற்றும் என்டாஜுல் ஆகியோர் கட்டுப்படுத்தி வந்ததையும், அப்பகுதி மக்களை அச்சுறுத்தி பயத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்தக் குண்டுகள் தயாரிக்கப்பட்டதையும் புலனாய்வில் கண்டறியப்பட்டது.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் இவ்வழக்கில், முன்னதாகவே நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று மேலும் இருவரை என்ஐஏ கைது செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments