ஜம்முவில் கனமழை, மண்சரிவால் சிக்கித்தவிக்கும் நூற்றுக்கணக்கான வாகனங்கள்!
ஜம்முவில் கனமழையால் ஏற்பட்டுள்ள மண்சரிவால் ஏராளமான வாகனங்கள் சிக்கித்தவிக்கின்றன.
ஜம்முவில் கனமழையால் ஏற்பட்டுள்ள மண்சரிவால் ஏராளமான வாகனங்கள் சிக்கித்தவிக்கின்றன.
ஜம்முவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முகலாய சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பிர் கி கலி பகுதிக்கு அருகே அரை கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்குச் சாலை மூடப்பட்டுள்ளது.
மேலும் போக்குவரத்து சேவையும் முழுமையாக முடங்கியுள்ளது என அதிகாரிகள் கூறினர்.
Advertisement
Advertisement
இதனால், கார்கள், சரக்கு வாகனங்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையின் இருபுறமும் செல்ல முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன.
சாலையில் விழுந்துள்ள மண் மற்றும் பாறை இடிபாடுகளை அகற்றி, போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் மீட்புக்குழுவினரும், கனரக இயந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சாலை முழுமையாகச் சீரமைக்கப்பட்டு, வானிலை மாறும் வரை இந்த வழித்தடத்தில் தேவையற்றப் பயணங்களைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஜம்மு பகுதியின் எல்லை மாவட்டங்களான ரஜோரி மற்றும் பூஞ்ச் ஆகியவற்றை, காஷ்மீர் பள்ளத்தாக்கின் சோபியான் மாவட்டத்துடன் இணைக்கும் ஒரு முக்கிய மாற்றுப் பாதையாக இந்த முகலாய சாலை விளங்குகிறது.
குறிப்பாக ரஜோரி மற்றும் பூஞ்ச் எல்லை மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு இந்தச் சாலை மிகவும் இன்றியமையாததாகும்.
Hundreds of vehicles were stranded after heavy rains triggered a mudslide on the Mughal Road, disrupting traffic on the key route connecting the districts of Rajouri and Poonch with the Kashmir valley, officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.