வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை
வேலூர் மாவட்டத்தில் திடீரென பெய்த பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
வேலூர் மாவட்டத்தில் திடீரென பெய்த பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா். இந்நிலையில், வழக்கம்போல சனிக்கிழமை காலையும் வெயில் கொளுத்திவந்த நிலையில், மாலை பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசியது.
இதையடுத்து, மாநகரில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக காட்பாடி சித்தூர பேருந்து நிலையம், கோணவட்டம் சர்வீஸ் சாலை உள்ளிட்ட மாநகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
Advertisement
Advertisement
இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். மேலும் பலத்த காற்று, கனமழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. கனமழை காரணமாக சற்றே வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Heavy rain with strong winds suddenly lashed Vellore district, causing rainwater to stagnate in low-lying areas.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.