வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை
வேலூர் மாவட்டத்தில் திடீரென பெய்த பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
வேலூர் மாவட்டத்தில் திடீரென பெய்த பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து வெயில் கொளுத்தி வரும் நிலையில் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். சனிக்கிழமை மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு சுமார் 7 மணி அளவில் வேலூர், காட்பாடி, பாகாயம், சத்துவாச்சாரி, பள்ளிகொண்டா மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக காட்பாடி சித்தூர பேருந்து நிலையம், கோணவட்டம் சர்வீஸ் சாலை உள்ளிட்ட மாநகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். மேலும் பலத்த காற்று, கனமழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கனமழை காரணமாக சற்றே வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.