முகப்பு
முதல்வர் யோகி ஆதித்யநாத்
இந்தியா

அமைதி, பாதுகாப்பு நிறைந்த சூழலில் பண்டிகைகள் அர்த்தமுள்ளதாக மாறும்: உ.பி. முதல்வர்

ஹோலி கொண்டாட்டம் பற்றி முதல்வர் கூறுவது..

இந்தியா

அமைதி, பாதுகாப்பு நிறைந்த சூழலில் பண்டிகைகள் அர்த்தமுள்ளதாக மாறும்: உ.பி. முதல்வர்

ஹோலி கொண்டாட்டம் பற்றி முதல்வர் கூறுவது..

Updated On : 4 மார்ச், 2026 at 7:15 AM
முதல்வர் யோகி ஆதித்யநாத்
பகிர்:

பாதுகாப்பு மற்றும் அமைதி நிறைந்த சூழலில் மட்டுமே பண்டிகைகள் அர்த்தமுள்ளதாக இருக்கும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

கோரக்நாத் கோயிலில் பாரம்பரிய ஹோலி கொண்டாட்டங்களைத் தொடங்கிவைத்து, ஹோலி பண்டிகை சமூக நல்லிணக்கம், உற்சாகம், கூட்டு மகிழ்ச்சியைக் குறிக்கிறது என்று முதல்வர் கூறினார்.

சமூகத்தில் அமைதி, பாதுகாப்பு உணர்வு மற்றும் பரஸ்பர நம்பிக்கை இருக்கும்போது மட்டுமே உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியின் பண்டிகைகள் கொண்டாட்ட வடிவத்தைப் பெறுகிறது.

முழு நாடும், உத்தரப் பிரதேசமும் இந்த நம்பிக்கை உணர்வுடன் முன்னேறி வருகின்றன. இந்தியா மற்றும் நாட்டின் மூதாதையர்களின் வளமான பாரம்பரியம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஹோலியின் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, நல்லிணக்க உணர்வில் அதை ஒப்படைத்ததாகவும், அதை தற்போதைய தலைமுறை சமமான ஆர்வத்துடன் முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஹோலி நிகழ்ச்சிகளும் அமைதியாக நடத்தப்பட்டதாக முதல்வர் கூறினார். மாநிலத்தில் 1.61 லட்ச இடங்களில் ஹோலிகா தகன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஆதித்யநாத் மாநில மக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார், மேலும் எதிர்கால சந்ததியினர் வரும் ஆண்டுகளில் இதே உற்சாகத்துடன் நல்லிணக்கப் பண்டிகையைக் கொண்டாடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

summary

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath on Wednesday said the festivals of joy and enthusiasm can be celebrated in their true spirit only in an atmosphere of security and peace.

முழு கட்டுரையைப் படிக்க →