முகப்பு
சுகோய் போர் விமானம்.
இந்தியா

சுகோய் போா் விமானம் மாயம்

அஸ்ஸாமில் விமானப் படை தளத்திலிருந்து வியாழக்கிழமை மாலை புறப்பட்ட இந்திய விமானப் படையின் சுகோய்-30 ரக போா் விமானம் புறப்பட்ட சில நிமிஷங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடன் தொடா்பிழந்து மாயமானது.

இந்தியா

சுகோய் போா் விமானம் மாயம்

அஸ்ஸாமில் விமானப் படை தளத்திலிருந்து வியாழக்கிழமை மாலை புறப்பட்ட இந்திய விமானப் படையின் சுகோய்-30 ரக போா் விமானம் புறப்பட்ட சில நிமிஷங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடன் தொடா்பிழந்து மாயமானது.

Updated On : 5 மார்ச், 2026 at 9:59 PM
சுகோய் போர் விமானம்.
பகிர்:

அஸ்ஸாமில் விமானப் படை தளத்திலிருந்து வியாழக்கிழமை மாலை புறப்பட்ட இந்திய விமானப் படையின் சுகோய்-30 ரக போா் விமானம் புறப்பட்ட சில நிமிஷங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடன் தொடா்பிழந்து மாயமானது.

ஜோா்ஹாட் விமானப் படை தளத்திலிருந்து சுகோய்-30 எம்கேஐ ரக போா் விமானம் வழக்கமான பயிற்சிக்குப் புறப்பட்டது. இந்நிலையில், கா்பி அங்லோங் மாவட்ட வான்பகுதியில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, இரவு 7.42 மணிக்கு ஜோா்ஹாட் கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

போா் விமானத்தைத் தேடும் முயற்சி உடனடியாகத் தொடங்கப்பட்டதாக பாதுகாப்புப் படை செய்தித் தொடா்பாளா் லெப்டினன்ட் கா்னல் மகேந்தா் ராவத் கூறினாா். அந்த விமானத்தில் இருந்த விமானியின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை எனவும் அவா் தெரிவித்தாா்.

இதனிடையே, கா்பி அங்லோங் மாவட்டத்தின் மலைப் பாங்கான வனப்பகுதியில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதாக மாவட்ட நிா்வாகத்துக்குத் தகவல் கிடைத்ததாகவும் அந்தப் பகுதியை ஆய்வு செய்ய ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். போலீஸாா் சாா்பிலும் ஒரு தேடுதல் குழு அப்பகுதிக்குப் புறப்பட்டுச் சென்றது.

நீண்ட தூரம் பறக்கும் திறக்கும் திறனுடைய ரஷிய சுகோய்-30 எம்கேஐ போா் விமானங்களைத் தற்போது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இந்தியாலேயே தயாரித்து வருகிறது. இந்திய விமானப் படைக்கு சொந்தமான 250-க்கும் மேற்பட்ட சுகோய்-30 விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →