அசாமில் விமானப் படை விமான விபத்து! 5 வீரர்கள் வீர மரணம்
அசாமில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உயிரிந்தனர்.
அசாமில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உயிரிந்தனர்.
அசாம் மாநிலம் ஜோர்கட் விமானப் படைத் தளத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு இந்த விபத்து நேரிட்டிருக்கிறது.
விமானப் படையில், போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படும் ஏன்-32 ரக விமானம், இறங்குதளத்தில் தரையிறங்கிய சிறிது நேரத்தில் வெடித்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
Advertisement
Advertisement
விமானம் தீப்பற்றி எரிந்த நிலையில், அதில் இருந்த 5 வீரர்கள் வீர மரணம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த துணை விமானி ஒருவர், வெளியே குதித்து உயிர் தப்பியிருக்கிறார்.
விமானப் படை விமான விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
summary