முகப்பு
இந்தியா

அசாமில் விமானப் படை விமான விபத்து! 5 வீரர்கள் வீர மரணம்

அசாமில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உயிரிந்தனர்.

Updated On : 13 ஜூன் 2026, 2:18 pm IST
பகிர்:

அசாமில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உயிரிந்தனர்.

அசாம் மாநிலம் ஜோர்கட் விமானப் படைத் தளத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு இந்த விபத்து நேரிட்டிருக்கிறது.

விமானப் படையில், போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படும் ஏன்-32 ரக விமானம், இறங்குதளத்தில் தரையிறங்கிய சிறிது நேரத்தில் வெடித்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

Advertisement

Advertisement

விமானம் தீப்பற்றி எரிந்த நிலையில், அதில் இருந்த 5 வீரர்கள் வீர மரணம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த துணை விமானி ஒருவர், வெளியே குதித்து உயிர் தப்பியிருக்கிறார்.

விமானப் படை விமான விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

summary

Air Force plane crash in Assam 5 personnel martyred

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.