முகப்பு
இந்தியா

எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!

புணேயில் எல்பிஜி எரிவாயு தட்டுப்பாடு எதிரொலியால், எரிவாயு தகன மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

Updated On : 9 மார்ச், 2026 at 5:29 PM
தகன மையம் | கோப்புப்படம்
பகிர்:

புணே : புணேயில் எல்பிஜி எரிவாயு தட்டுப்பாடு எதிரொலியால், எரிவாயு தகன மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இது குறித்து, புணே முனிசிபல் கார்ப்பரேசன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மார்ச் 5-இல் ஒரு ஆணை பிறப்பித்தது. அதில், கையிருப்பிலுள்ள ப்ரோபேன் மற்றும் ப்யூட்டேன் எரிவாயுவை, சமையல் உள்ளிட்ட உள்நாட்டு எல்பிஜி விநியோகத்துக்கு முன்னுரிமை அளித்து பயன்படுத்தத அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, எரிவாயு தட்டுப்பாட்டால், இங்குள்ள அனைத்து எரிவாயு தகன மையங்களையும் கடந்த 5-ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 8) அறிவித்துள்ளது.

summary

The Pune Municipal Corporation has temporarily closed the city's gas crematoriums following restrictions on the use of Liquefied Petroleum Gas (LPG) components such as propane and butane amid the ongoing West Asia conflict.

முழு கட்டுரையைப் படிக்க →