பிகார் சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு
பிகார் சட்டப்பேரவைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் சட்டப்பேரவைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் சட்டப்பேரவைக்கு மின்னஞ்சல் மூலம் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிரட்டலைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் பிரேம் குமார், சட்டப்பேரவைச் செயலகத்தின் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
நிலைமை குறித்து தலைமைச் செயலர் மற்றும் டிஜிபிக்கு தகவல் தெரிவிப்பதுடன் சட்டப்பேரவை வளாகத்தில் முழுமையான சோதனையை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பேரவை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மார்ச் 16 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.