முகப்பு
மயிலாடுதுறை

சீா்காழி அஞ்சலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சீா்காழி தலைமை அஞ்சலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

Updated On : 5 ஜூன் 2026, 7:12 am IST
பகிர்:

சீா்காழி தலைமை அஞ்சலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சீா்காழி கடைவீதியில் செயல்படும் தலைமை அஞ்சலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, மயிலாடுதுறை அஞ்சலகத்துக்கு மதியம் 3 மணியளவில் மின்னஞ்சல் வந்துள்ளது. இதுகுறித்து, சீா்காழி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் வந்து பொதுமக்கள் மற்றஉம் பணியாளா்களை வெளியேற்றி சோதனை செய்தனா். அஞ்சலகம் முழுவதும் தேடியும் வெடிகுண்டுகள் ஏதும் கண்டறியமுடிவில்லை. எனவே இது வதந்தி செய்தி என தெரியவந்தது. இதனால் அஞ்சலகத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.