கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி மார்ச் 23.
கேரள தேர்தல் களத்தில் மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கேரளத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி மார்ச் 23. அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
மொத்தம் 140 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய கேரளத்தில், வரும் ஏப். 9-இல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 19-இல் தொடங்கிய நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
வேட்புமனு பரிசீலனை செவ்வாய்க்கிழமை(மார்ச் 24) நடைபெறுகிறது. கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் ஏப். 9-இல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது.
Advertisement
Advertisement
Kerala polls: 1,202 candidates file nominations as deadline ends
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.