கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி மார்ச் 23.
கேரள தேர்தல் களத்தில் மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கேரளத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி மார்ச் 23. அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
மொத்தம் 140 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய கேரளத்தில், வரும் ஏப். 9-இல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 19-இல் தொடங்கிய நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
summary