2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சுநேத்ரா பவார் வெற்றி!
மகாராஷ்டிரத்தில் பாராமதி இடைத்தேர்தலில் மறைந்த அஜீத் பவாரின் மனைவி சுநேத்ரா பவார் வெற்றி...
மகாராஷ்டிர மாநிலம் பாராமதி இடைத்தேர்தலில் மறைந்த அஜீத் பவாரின் மனைவி சுநேத்ரா பவார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவார், ஜன. 28 அன்று நிகழ்ந்த விமான விபத்தில் பலியானார். அஜீத் பவாரின் மறைவைத் தொடா்ந்து, அவா் வகித்து வந்த துணை முதல்வா் பதவியை அவரது மனைவியான சுநேத்ரா பவார் ஏற்றார்.
பின்னர் சுநேத்ரா, தான் வகித்துவந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். அஜீத் பவார் மறைவால் பாராமதி தொகுதிக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தரப்பில் (அஜீத் பவார் தரப்பு) சுநேத்ரா பவார் போட்டியிட்டார். இவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் ஆகாஷ் மோர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் பின்னர் அஜீத் பவாருக்கு மரியாதை செய்யும் விதமாக தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். எனினும் பாராமதி தொகுதியில் சுயேச்சைகள் பலரும் போட்டியிட்டனர்.
Advertisement
ஏப். 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று நேற்று(மே 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் அவர் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவர் 2,09,921 வாக்குகள் பெற்று புதிய ராஷ்ட்ரிய சமாஜ் கட்சி வேட்பாளர் ஆர்ஒய் குட்கடே(873 வாக்குகள்)-வைவிட 2,09,048 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.