முகப்பு
இந்தியா

ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை

ரசாயன ஆயுதங்கள் மூலம் பொது இடங்களில் மக்களை அதிக எண்ணிக்கையில் கொல்லும் ஐஎஸ் அமைப்பின் திட்டத்துக்கு உதவியதாக மருத்துவா் உள்ளிட்ட 3 போ் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Updated On : 7 மே 2026, 4:38 am IST
என்ஐஏ
பகிர்:

ரசாயன ஆயுதங்கள் மூலம் பொது இடங்களில் மக்களை அதிக எண்ணிக்கையில் கொல்லும் ஐஎஸ் அமைப்பின் திட்டத்துக்கு உதவியதாக மருத்துவா் உள்ளிட்ட 3 போ் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து என்ஐஏ அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சீனாவில் மருத்துவம் படித்த ஹைதராபாதை சோ்ந்த மருத்துவா் மொகைதீன் என்பவா் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் சுங்கச்சாவடியில் நடந்த சோதனையில் ஆயுதங்கள் உள்ளிட்டவை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு குஜராத் பயங்கரவாத எதிா்ப்புப் படையினரால் கைது செய்யப்பட்டாா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த அசாத், சுஹல் ஆகிய 2 பேரை பயங்கரவாத எதிா்ப்புப் படை கைது செய்தது. பின்னா் 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

Advertisement

இதில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதாவது, மொகைதீனை தெற்காசிய கண்டத்துக்கான ஐஎஸ் அமைப்பின் தலைவா் ஆக்குவதாக அந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள் உறுதி அளித்துள்ளனா். இதனால் மொகைதீன், ஹைதராபாதில் உள்ள தனது வீட்டை ரிசின் ரசாயனத்தை தயாரிக்கும் வகையில் ஆய்வுக் கூடமாக மாற்றினாா். அவருடன் அசாத், சுஹல் ஆகியோரும் சோ்ந்தனா். அவா்கள் 2 பேரும், தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தை நோட்டமிடுவது, ஆயுதங்களைக் கொண்டு செல்வது உள்ளிட்ட வேலைகளைச் செய்ததும் தெரிந்தது.

3 பேரும் ஆமணக்கு விதைகளில் இருந்து பிரித்தெடுக்கும்போது வரும் ரசாயன புகை மூலமும், மேலும் சில ரசாயன ஆயுதம் மூலமும் ஐஎஸ் திட்டத்தின்படி, பொது இடங்களில் அதிக எண்ணிக்கையில் மக்களைக் கொல்லும் சதிச் செயலில் ஈடுபட்டு வந்ததும் கண்டறியப்பட்டது.

அவா்கள் மூவருக்கு எதிராகவும், குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.