முகப்பு
இந்தியா

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அதிநவீன ஏவுகணை: வெற்றிகரமாக சோதனை

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நவீன சாதனத்துடன் கூடிய அதிநவீன ஏவுகணை சோதனை ஒடிஸா மாநிலத்தையொட்டிய கடல் பகுதியில் வியாழக்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

Updated On : 9 மே 2026, 1:39 am IST
ஒடிஸாவையொட்டிய கடல் பகுதியில் பறக்கும் விமானத்திலிருந்து இலக்கை நோக்கி வெற்றிகரமாக ஏவப்பட்ட அதிநவீன ரக ஏவுகணை.
பகிர்:

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நவீன சாதனத்துடன் கூடிய அதிநவீன ஏவுகணை சோதனை ஒடிஸா மாநிலத்தையொட்டிய கடல் பகுதியில் வியாழக்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

‘தாரா’ எனப்படும் இந்த சாதனம் பாதையை மாற்றிக் கொண்டு தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறனுடையது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஹைதராபாதில் உள்ள இமாரத் ஆராய்ச்சி மையம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வகங்கள் இணைந்து தயாரித்த ‘தாரா’ என்ற இந்த நவீன ஆயுத அமைப்பு தரை வழியாக இலக்குகளைத் தாக்கி அழிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது இலக்கை நோக்கிச் சென்ற பிறகு, பாதையை மாற்றிக் கொள்ள முடியாத சாதாரண ஏவுகணையை மேம்பட்ட வழிகாட்டுதல் அமைப்புகளைக் கொண்டு திசைமாற்றி இலக்கு நோக்கிச் செலுத்தும் திறன்கொண்ட இந்தியாவில் தயாரிக்கப்பட முதல் உள்நாட்டு ஏவுகணை அமைப்பாகும்.

இந்த அமைப்பை உருவாக்கிய டிஆா்டிஓ மற்றும் இந்திய விமானப் படைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டுகள் தெரிவித்தாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.