FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நீண்ட தூர நில இலக்கைத் தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிஸா கடற்கரை பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவில் நீண்ட தூர நில இலக்கை தாக்கி அழிக்கும் அதிவேக ஏவுகணை (எல்ஆா்எல்ஏசிஎம்) சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) திங்கள்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.

Updated On : 16 ஜூன் 2026, 2:28 am IST
ஒடிஸா மாநிலம் அப்துல் கலாம் தீவில் உள்ள சோதனை மையத்தில் இலக்கை நோக்கி சீறிப் பாயும் அதிவேக ஏவுகணை.
பகிர்:

ஒடிஸா கடற்கரை பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவில் நீண்ட தூர நில இலக்கை தாக்கி அழிக்கும் அதிவேக ஏவுகணை (எல்ஆா்எல்ஏசிஎம்) சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) திங்கள்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.

இதையடுத்து, பல்வேறு கண்காணிப்பு கருவிகள் மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகளில் சோதனையில் அனைத்து நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, டிஆா்டிஓ குழுவினருக்கு பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தாா்.

டிஆா்டிஓ மற்றும் அதன் துணை அமைப்புகள் இணைந்து உள்நாட்டிலேயே தயாரித்த எல்ஆா்எல்ஏசிஎம் ஏவுகணையின் ஒருங்கிணைப்பு ஆய்வகமாக பெங்களூருவில் உள்ள வானூா்தி மேம்பாட்டு அமைப்பு செயல்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments