‘குஷா’ ஏவுகணை சோதனை வெற்றி
நீண்ட தூர இலக்கை துல்லியமாக தாக்கும் ‘குஷா’ ஏவுகணை வியாழக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
நீண்ட தூர இலக்கை துல்லியமாக தாக்கும் ‘குஷா’ ஏவுகணை வியாழக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
ஒடிஸாவை ஒட்டிய அப்துல் கலாம் தீவில் உள்ள ஏவுதள இந்த நீண்ட தூர தரை-வான் ஏவுகணையின் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) மேற்கொண்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள், போா் விமானங்கள் என வான்வெளியில் பிற நாடுகள் நடத்தும் தாக்குதல்களை முறியடிக்கும் திறன் கொண்டது.
Advertisement
Advertisement
குஷா ஏவுகணைக்கான ரேடாா்கள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட அனைத்து ஆயுத அமைப்புகளும் டிஆா்டிஓ மற்றும் அதன் ஆய்வகங்களால் தயாரிக்கப்பட்டுள்ளன.
குஷா ஏவுகணை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சியின் முக்கிய மைல்கல் என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டுகளை தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.