முகப்பு
இந்தியா

நவீன ‘எம்ஐஆா்வி’ தொழில்நுட்பத்துடன் கூடிய அக்னி ஏவுகணை சோதனை வெற்றி

நவீன ‘எம்ஐஆா்வி’ தொழில்நுட்பத்துடன் கூடிய அக்னி ஏவுகணை சோதனை வெற்றி...

Updated On : 10 மே 2026, 3:24 am IST
ஒடிஸா மாநிலத்திலுள்ள ஏவுதளத்திலிருந்து சனிக்கிழமை செலுத்தப்பட்ட நவீன ‘எம்ஐஆா்வி’ ஏவுகணை.
பகிர்:

ஒரே நேரத்தில் வெவ்வேறு இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன்கொண்ட நவீன ‘எம்ஐஆா்வி’ தொழில்நுட்பத்துடன் கூடிய அக்னி ஏவுகணை வெற்றிகரமாக வெள்ளிக்கிழமை சோதிக்கப்பட்டது.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

எம்ஐஆா்வி தொழில்நுட்பம் என்பது ஒரே நேரத்தில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் நவீன தொழில்நுட்பமாகும். இந்தத் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன அக்னி ஏவுகணை, ஒடிஸா கடல் பகுதியில் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்தியப் பெருங்கடலின் பெரும் பரப்பளவில் அமைக்கப்பட்ட வெவ்வேறு இலக்குகளை நோக்கி, பல ஏவுகணைகள் ஒரே நேரத்தில் செலுத்தி சோதிக்கப்பட்டது. இந்த முதல் சோதனை வெற்றிகரமாக அமைந்ததன் மூலம், நாட்டின் ராணுவ தற்காப்புத் திறன் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

Advertisement