நீதித் துறை வரலாற்றில் புதிய சாதனை: ஒரே நேரத்தில் 4 பெண் தலைமை நீதிபதிகள்
உயர் நீதிமன்றங்களில் ஒரே நேரத்தில் 4 பெண் தலைமை நீதிபதிகள் குறித்து...
நாட்டின் உயர் நீதிமன்றங்களில் ஒரே நேரத்தில் 4 பெண் நீதிபதிகள் தலைமை நீதிபதிகளாக பதவி வகித்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் உயர் நீதிமன்றங்களில் மொத்தமுள்ள 781 நீதிபதிகளில் 116 பேர் (14.85%) பெண் நீதிபதிகள்.
இந்த 116 பெண் நீதிபதிகளில் 4 நீதிபதிகள் ஒரே நேரத்தில் தலைமை நீதிபதிகளாக பதவி வகிப்பதன் மூலம் இந்தியாவின் நீதித் துறையில் புதிய சாதனை படைத்துள்ளனர்.
Advertisement
Advertisement
பாட்னா உயர் நீதிமன்றத்தில் மீனாட்சி மதன்ராய், குஜராத் உயர் நீதிமன்றத்தில் சுனிதா அகர்வால், மேகாலயா உயர் நீதிமன்றத்தில் ரேவதி மோஹிதே தேரே, ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் லிசா கில் ஆகிய நால்வரும் தலைமை நீதிபதிகளாக பதவி வகித்து வருகின்றனர். இந்தியாவில் ஒரே நேரத்தில் 4 பெண் நீதிபதிகள் ஒரே நேரத்தில் முழு நேர தலைமை நீதிபதிகளாக இருப்பது இதுவே முதல்முறை.
இதற்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டிலும் இதுபோன்று 4 பெண் நீதிபதிகள் தலைமை நீதிபதிகளாக இருந்திருந்தாலும், அவர்களில் ஒருவர் மட்டும் பொறுப்பு தலைமை நீதிபதியாகவே பணியாற்றி வந்தார்.