முகப்பு
இந்தியா

ரிலையன்ஸ் ஏடிஏ குழும நிறுவனங்களுக்கு எதிரான வழக்கு: மும்பையில் 17 இடங்களில் சிபிஐ சோதனை

ரிலையன்ஸ் ஏடிஏ குழும நிறுவனங்களுக்கு எதிரான வழக்கு: மும்பையில் 17 இடங்களில் சிபிஐ சோதனை

Updated On : 10 மே 2026, 6:01 am IST
அனில் அம்பானி - கோப்புப் படம்
பகிர்:

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஏடிஏ குழும நிறுவனங்களான ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம், ரிலையன்ஸ் வணிக நிதி நிறுவனம், ரிலையன் வீட்டுக் கடன் நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள 3 பண மோசடி வழக்குகள் தொடா்பாக மும்பையில் 17 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதுகுறித்து சிபிஐ-யின் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடன் மோசடி மூலம் வங்கிகள் மற்றும் எல்ஐசி நிறுவனத்துக்கு ரூ. 27,337 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம், ரிலையன்ஸ் வணிக நிதி நிறுவனம், ரிலையன்ஸ் வீட்டுக் கடன் நிறுவனம் உள்ளிட்ட ரிலையன்ஸ் ஏடிஏ குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்கள், நிறுவன இயக்குநா்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 17 இடங்களில் சனிக்கிழமை தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. இதில், வங்கிகளின் நிதியை முறைகேடாக பல்வேறு நிறுவனங்களுக்கு மாற்றியதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, பல்வேறு பொதுத் துறை வங்கிகள் மற்றும் ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் (எல்ஐசி) கடன் பெற்று பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அனில் அம்பானி மீதும், அவரின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் மீதும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. பின்னா், மும்பையில் உள்ள அனில் அம்பானியின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனா். தற்போது, இந்தக் குழுமத்துக்குத் தொடா்புடைய நிறுவனங்களின் மேலும் 17 இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

சிபிஐ-யின் இந்த வழக்கின் அடிப்படையில், பண மோசடி வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, இதுவரை ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்துக்குச் சொந்தமான ரூ. 19,344 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments