முகப்பு
இந்தியா

மோசடி வழக்கு: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன முன்னாள் அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ சோதனை

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு எதிரான மோசடி வழக்கில், அந்த நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகளின் வீடுகள் உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ வியாழக்கிழமை சோதனை நடத்தியது.

Updated On : 15 மே 2026, 4:58 am IST
சிபிஐ - கோப்புப்படம்
பகிர்:

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு எதிரான மோசடி வழக்கில், அந்த நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகளின் வீடுகள் உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ வியாழக்கிழமை சோதனை நடத்தியது.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:

பல்வேறு பொதுத்துறை வங்கிகள், எல்ஐசி ஆகியவை ரூ.27,337 ஆயிரம் கோடி மோசடி செய்து விட்டதாக அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீது அளித்த புகாரின்பேரில் சிபிஐ 7 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கெனவே 31 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இதேபோல் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன மூத்த அதிகாரிகள் 2 பேரையும் கைது செய்துள்ளது. அவா்கள் 2 பேரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனா்.

Advertisement

அடுத்தகட்ட நடவடிக்கையாக மும்பை, குருகிராம், பெங்களூரில் உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன முன்னாள் சிஇஓ, சிஎப்ஓ, இயக்குநா்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். இவா்கள் அனைவரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை பணியாற்றியவா்கள். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.