முகப்பு
இந்தியா

திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு

திருமலை திருப்பதியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார்.

Updated On : 10 மே 2026, 4:31 pm IST
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
பகிர்:

திருமலை திருப்பதியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார்.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது இரண்டாவது நாள் பயணத்தின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை திருமலை திருப்பதி கோயிலுக்குச் சென்றார்.

கோயிலில் ஞானேஷ் குமார் மற்றும் அவரது மனைவிக்கும் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்த அர்ச்சகர்கள் பின்னர் மரியாதையும் அளித்தனர்.

Advertisement

தரிசனத்திற்குப் பிறகு, ரங்கநாயக மண்டபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு பட்டு வஸ்திரங்களை அணிவித்து கௌரவித்தனர்.

மேலும், தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினர்.

உலகின் மிகவும் பணக்கார இந்து கோயிலான திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில், ஆந்திரப் பிரதேசத்தின் திருமலை மலையில் அமைந்துள்ளது. இது திருமலை திருப்பதி தேவஸ்தானம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

summary

CEC Gyanesh Kumar on Sunday visited Tirumala temple and offered prayers to Lord Venkateswara as part of his second-day tour schedule, an official said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.