போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண்
போக்சோ வழக்கில், மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி பகீரத் சைபராபாத் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
போக்சோ வழக்கில், மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி பகீரத் சைபராபாத் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
தெலங்கானா மாநிலத்தில் மத்திய அமைச்சர் பண்டி சஞ்சயின் மகனான பகீரத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் இடைக்கால நிவாரணம் வழங்க தெலங்கானா உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.
மேலும் இந்த வழக்கில் பண்டி பகீரத்துக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் சைபராபாத் காவல் நிலையத்தில் பண்டி பகீரத் சரணடைந்தார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து இதுகுறித்து பகீரத்தின் தந்தையும் மத்திய அமைச்சருமான பண்டி சஞ்சய் குமார் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரம் புகார் பதிவு செய்யப்பட்ட உடனேயே, போலீஸாருக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மகனிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தொடர்ந்து கூறி வரும் பகீரத், வழக்கறிஞர்களிடம் தனக்கு சாதகமான ஆதாரங்களை சமர்ப்பித்தார் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
பண்டி சஞ்சய் அளித்த தகவலின்படி, இந்த வழக்கு ரத்து செய்யப்படும் என்றும் பகீரத்துக்கு ஜாமீன் கிடைக்கும் என்றும் வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்ததே அவர் ஆஜராவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
POCSO case: Bandi Sanjay asks son to appear before police, urges cooperation
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.